செய்திகள்
மரணம்

போளூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2020-11-24 14:01 GMT   |   Update On 2020-11-24 14:01 GMT
போளூர் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூரை அடுத்த அரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளம்மாள். சமீபத்தில் பெய்த மழையால் இவரது வீடு வலுவிழந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காளி (வயது 60) என்ற கூலித்தொழிலாளி குள்ளம்மாள் வீட்டை ஒட்டி நின்று கொண்டு இருந்தார். அப்போது குள்ளமாள் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காளி சிக்கி படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் விரைந்து சென்று காளியை இடிபாடுகளிலிருந்து மீட்டு கொம்மனந்தல் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்தபின் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து போளூர் சப்இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News