செய்திகள்
கோப்புபடம்

பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2020-11-24 07:51 GMT   |   Update On 2020-11-24 07:51 GMT
பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் விஜயராஜ் (வயது 30) லாரி டிரைவர். இவருக்கும் வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் பொன்னி (22) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு விஜயராஜ் தனது மனைவி பொன்னியிடம் அவரது பெற்றோரிடம் இருந்து கார் வாங்கி தருமாறு கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று பொன்னி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமச்சந்திரன் காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் பொன்னியின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் பொன்னி இறந்துள்ளதால், அவரது சாவு குறித்து கடலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News