செய்திகள்
தற்கொலை

நல்லம்பள்ளி அருகே வேன் டிரைவர் தற்கொலை

Published On 2020-11-24 11:11 IST   |   Update On 2020-11-24 11:11:00 IST
நல்லம்பள்ளி அருகே வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 62). வேன் டிரைவர். இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News