செய்திகள்
ஓட்டு வீடு

பழைய கட்டடங்கள், மண், குடிசை வீட்டில் வசிக்கும் மக்கள் முகாமுக்கு செல்க: திருவாரூர், கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

Published On 2020-11-23 13:28 GMT   |   Update On 2020-11-23 14:24 GMT
நிவர் புயல் காரணமாக மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பழைய கட்டடங்களில் வசிக்கும் மக்கள் முகாமுக்கு செல்லுமாறு கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 25-ந்தேதி நிவர் புயலமாக மாறி கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஒருவேளை அதிதீவிர புயலாக மாறினால் 100 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த காற்றழுத்தத்தாழ்வு மற்றும் புயல் காரணமாக நாளையில் இருந்து வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால் கடலூர், திருவாரூர் உள்பட 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் ஆட்சியர் ‘‘பழமையான வீடுகளில் வசிக்கும் நபர்கள், பாழடைந்த, அபாயக்கட்டத்தில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் நபர்கள் மூன்று நாட்களுக்கு முகாமில் சென்று தங்க வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் கடலூர் ஆட்சியர் ‘‘மண், குடிசை வீடுகளில் வசிப்போர் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 300 ஜேசிபி, ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது’’ உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News