செய்திகள்
வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி தீவிரம்
பலத்த மழை, சூறாவளி வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினமும் 15 முதல் 20 லாரிகளில் உப்பு அனுப்பப்படுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் ஆகிய 3 இடங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் நாள்தோறும் லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்தனர்.தற்போது 1 லட்சம் டன் உப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கன மழை, சூறாவளி வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து தினமும் 50 லாரிகளில் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது லாரி வரத்துக்குறைவால் தினமும் 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஒரு டன் உப்பு ரூ.400-க்கு விற்பனை ஆனது, தற்போது ஒரு டன் உப்பு ரூ,1,000 வரை விற்பனை ஆகிறது.
வடகிழக்கு பருவ மழையையொட்டி கன மழை மற்றும் சூறாவளி வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் உப்பு இருப்பு வைத்துள்ள உற்பத்தியாளர்கள் உப்பை விரைவாக விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் கஜா புயலின் போது இருப்பு வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டன் உப்பு முற்றிலும் சேதமானது. கடந்த 2 நாட்களாக உப்பை பாக்கெட் போட்டு லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழையில் இருந்து பாதுகாக்க உப்பை பிளாஸ்டிக் தார்பாய் மற்றும் பனைமட்டை வைத்து மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் ஆகிய 3 இடங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் நாள்தோறும் லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்தனர்.தற்போது 1 லட்சம் டன் உப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கன மழை, சூறாவளி வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து தினமும் 50 லாரிகளில் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது லாரி வரத்துக்குறைவால் தினமும் 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஒரு டன் உப்பு ரூ.400-க்கு விற்பனை ஆனது, தற்போது ஒரு டன் உப்பு ரூ,1,000 வரை விற்பனை ஆகிறது.
வடகிழக்கு பருவ மழையையொட்டி கன மழை மற்றும் சூறாவளி வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் உப்பு இருப்பு வைத்துள்ள உற்பத்தியாளர்கள் உப்பை விரைவாக விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் கஜா புயலின் போது இருப்பு வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டன் உப்பு முற்றிலும் சேதமானது. கடந்த 2 நாட்களாக உப்பை பாக்கெட் போட்டு லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழையில் இருந்து பாதுகாக்க உப்பை பிளாஸ்டிக் தார்பாய் மற்றும் பனைமட்டை வைத்து மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.