செய்திகள்
கோப்புபடம்

வேப்பூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2020-11-23 07:51 GMT   |   Update On 2020-11-23 07:51 GMT
வேப்பூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:

வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சிவப்பிரியா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் சிவப்பிரியா மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு கொண்டார். 

இதைபார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News