செய்திகள்
கைது

கீழ்வேளூர் பகுதியில சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2020-11-23 09:09 IST   |   Update On 2020-11-23 09:09:00 IST
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே காக்கழனி- ஆத்தூர் பாலம் பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் தங்கபாண்டியன் (வயது26), பெருங்கடம்பனூர் சுடுகாடு அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயராஜ் (40) ஆகிய 2 பேரை பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியன், ஜெயராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News