செய்திகள்
கைது

திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2020-11-21 13:58 GMT   |   Update On 2020-11-21 13:58 GMT
திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்:

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருச்சி ஏர்போர்ட் கரிகாலன்நகரை சேர்ந்த மகேந்திரன் (வயது 26) என்பதும், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News