செய்திகள்
கோப்புப்படம்

கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 25-ந்தேதி தொடங்குகிறது

Published On 2020-11-21 12:07 IST   |   Update On 2020-11-21 12:07:00 IST
அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு 25-ந்தேதி நடைபெற உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நேர்முகத்தேர்வு வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (விடுப்பு நாளான 29-ந் தேதி நீங்கலாக) உள்ள 5 வேலை நாட்களில் அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள அரியலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடத்தப்பட உள்ளது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல் தரப்பட்டுள்ளது.

இந்த தகவலை அரியலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு பணி நிலைய தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான செல்வகுமரன் தெரிவித்துள்ளார்.

Similar News