செய்திகள்
தெருவில் தேங்கிய மழைநீர்

வடிகால் வாய்க்கால் இல்லாததால் தெருவில் தேங்கிய மழைநீர்

Published On 2020-11-20 16:40 IST   |   Update On 2020-11-20 16:40:00 IST
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடிகால் வாய்க்கால் இல்லாததால் தெருவில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் 6-வது வார்டு மாரியம்மன் கோவில் அருகே தெருவின் இருபுறமும் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களை இயக்க முடியாமலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்தால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து நாசம் ஆகும் சூழ்நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இருபுறமும் வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News