செய்திகள்
திருமானூர் அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் மற்றும் திருமானூர் ஆகிய 2 இடங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் மற்றும் திருமானூர் ஆகிய 2 இடங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்களில் 5 சதவீத வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பணிகளில் உள்ள காலியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், சங்க ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், சோலமுத்து உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.