செய்திகள்
கோப்புபடம்

உடையார்பாளையம் அருகே மது விற்ற 3 பேர் கைது

Published On 2020-11-19 13:15 GMT   |   Update On 2020-11-19 13:15 GMT
உடையார்பாளையம் அருகே மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அன்புமணி (50), தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் (44) ஆகிய 2 பேரும் அப்பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றனர். 

போலீசார் இருவரையும் கைது செய்து, பதுக்கி வைத்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் சாத்தம்பாடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மதுவிற்ற சாத்தம்பாடி மெயின் ரோட்டை சார்ந்த முருகன் (38) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News