செய்திகள்
கைது

சேவல் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2020-11-17 09:46 GMT   |   Update On 2020-11-17 09:46 GMT
அந்தியூர் அருகே சேவல் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் முனியப்பன் கோவில் பகுதியில் வெள்ளித்திருப்பூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 6 பேர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையத்தை சேர்ந்த மணி (வயது 50), ராமசாமி (52), குருசாமி (40) உள்பட 6 பேர் என்பதும், அவர்கள் சேவல்களை வைத்து சூதாடியதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News