செய்திகள்
விபத்து பலி

பவானி அருகே விபத்தில் வியாபாரி பலி

Published On 2020-11-17 14:54 IST   |   Update On 2020-11-17 14:57:00 IST
பவானி அருகே விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:

பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மகன் ரவி (வயது 31). வியாபாரி. கடந்த 6 மாதத்துக்கு முன்பு குருப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்துக்கு குடி வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பண வசூலுக்கு மோட்டார்சைக்கிளில் ரவி சென்றார். பவானியை அடுத்த காமதேனு நகருக்கு செல்லும்போது அங்கு ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளின் மீது ரவியின் மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து ரவி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News