செய்திகள்
ஈரோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலி
ஈரோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
மகுடஞ்சாவடிக்கும், மாவிலிபாளையத்துக்கும் இடைபட்ட ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா மாவிலிபாளையம் வளையசெட்டிபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் பவித்ரன் (வயது 26) என்பதும், அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பவித்ரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.