செய்திகள்
வேளாங்கண்ணி அருகே தொழிலாளி தற்கொலை
வேளாங்கண்ணி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே உள்ள நாரணமங்கலம் ஆய்மழை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது45). தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்றுமுன்தினம் பாலசுப்பிரமணியன் விஷம் தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.