செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவருடைய மனைவி கண்டித்ததால் மனமுடைந்த சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.