செய்திகள்
கைது

உடையார்பாளையம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2020-11-07 06:15 GMT   |   Update On 2020-11-07 06:15 GMT
உடையார்பாளையம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

உடையார்பாளையம் தாசில்தார் கலைவாணன், தா.பழூர் வருவாய் ஆய்வாளர் பொன்பகவதிராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உடையார்பாளையம் அருகே பருக்கல் கிராமத்தில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து சென்றனர். அப்போது அறங்கோட்டை கொள்ளிட கரையோரத்தில் இருந்து மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி, பறிமுதல் செய்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல் கடத்தி வந்தவர்கள் தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த அன்பழகன்(வயது 47), முனியதிரையான்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(46), அறங்கோட்டை கிராமத்தை சேர்ந்த முத்துசாமி(44) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News