செய்திகள்
மரணம்

விருத்தாசலம் சிறை கைதி திடீர் மரணம்

Published On 2020-11-05 13:55 IST   |   Update On 2020-11-05 13:55:00 IST
விருத்தாசலம் சிறை கைதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் செல்வமுருகன் (39). இவரை திருட்டு வழக்கு தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கடந்த 30-ந் தேதி கைது செய்தனர்.

அவர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கைதி செல்வமுருகனுக்கு கடந்த 2-ந் தேதி வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை சிறை காவலர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்து சிறைக்கு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு செல்வமுருகனுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இது குறித்து செல்வமுருகன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடல் நலக்குறைவால் இறந்த கைதி செல்வமுருகனுக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

Similar News