செய்திகள்
அந்தியூர் அருகே கஞ்சா விற்றவர் கைது
அந்தியூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் நின்று கொண்டு கஞ்சா விற்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்தபோது, சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்த காளிதாஸ் (வயது 42) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர்.