செய்திகள்
கொரோனா தொற்று பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா

Published On 2020-11-02 07:55 IST   |   Update On 2020-11-02 07:55:00 IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் நடப்பு மாதம் 30-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தளர்வுகளால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் தினமும் சுமார் 100 பேர் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்தல் போன்ற நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 393 ஆக உயர்ந்தது. இதில் நேற்று ஒரே நாளில்101 பேர் குணமடைந்தார்கள். இதுவரை மொத்தம் 9 ஆயிரத்து 468 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். தற்போது வரை மொத்தம் 124 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Similar News