செய்திகள்
டி.என்.பாளையம் அருகே தூக்குப்போட்டு கல்லூரி ஊழியர் தற்கொலை
டி.என்.பாளையம் அருகே கல்லூரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
கோபியை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு கட்டுப்பாட்டு கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இவர் தன்னுடைய மனைவியை கடந்த ஒரு ஆண்டுக்கும் ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் உள்ள விட்டத்தில் வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.