செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு அருகே மது விற்றவர் கைது

Published On 2020-11-01 19:24 IST   |   Update On 2020-11-01 19:24:00 IST
ஈரோடு அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் அழகரசன் நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையில் அவர் கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கவின் (வயது 31) என்பதும், அவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கவினை போலீசார் கைது செய்தனர்.

Similar News