செய்திகள்
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூலபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-01 07:58 GMT   |   Update On 2020-11-01 07:58 GMT
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர்கள் ஜாபர் சாதிக், திருச்செல்வம், அயுப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

முன்னதாக இந்திரா காந்தி நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவர்களது உருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாசலம், பாஸ்கர் ராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் கனகராஜ், வின்சென்ட், சச்சிதானந்தம், சாகுல் அமீது, ஞானசேகரன், பொருளாளர் வெங்கடகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் துரைசாமி, நிர்வாக தலைவர் ரவி, சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு அருகே உள்ள மூலபாளையத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். மேலிட பார்வையாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல், வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், பொருளாளர் ரவி, நிர்வாகிகள் நடராஜ், ஈங்கூர் ரவி, தளபதி ரமேஷ், ஆரிப் உள்பட பலர் கலந்து கொண்டு, வேளாண் சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Tags:    

Similar News