செய்திகள்
கைது

100 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

Published On 2020-10-28 15:02 IST   |   Update On 2020-10-28 15:02:00 IST
ஆந்திராவில் இருந்து கண்ணமங்கலம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்ற லாரியில் இருந்து 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
கண்ணமங்கலம்:

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீசார், கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து கண்ணமங்கலம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்ற லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 100 கிலோ கஞ்சா 40 பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாரி, 2 மோட்டார் சைக்கிள்களுடன் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்த உலகநாதன் (வயது 48), ஜாகீர்உசேன் (48), நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த லாரி டிரைவர் லூர்து அந்தோணி (39) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Similar News