செய்திகள்
பற்களுடன் பிறந்த பெண் குழந்தை

காட்டுமன்னார்கோவில் அருகே பற்களுடன் பிறந்த பெண் குழந்தை

Published On 2020-10-28 08:38 GMT   |   Update On 2020-10-28 08:38 GMT
காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும்போதே கீழ்தாடையில் 2 பற்கள், மேல் தாடையில் 1 பல் என 3 பற்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே மா.கொளக்குடி எல்.இ.பி.நகரை சேர்ந்தவர் பாலமுருகன். கூலி தொழிலாளி. அவரது மனைவி நிவேதா.

இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் 2-வதாக கர்ப்பமான நிவேதாவுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சுகபிரசவம் நடந்தது.

அப்போது 2-வதும் பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தை அழும்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிறக்கும்போதே கீழ்தாடையில் 2 பற்கள், மேல் தாடையில் 1 பல் என 3 பற்களுடன் பிறந்துள்ளது. தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Tags:    

Similar News