செய்திகள்
மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது மாரப்பன் தெருவில் சக்திவேல் (வயது34) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.