செய்திகள்
டாஸ்மாக் கடை

மிலாது நபியான நாளை மறுநாள் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்

Published On 2020-10-28 08:12 GMT   |   Update On 2020-10-28 08:12 GMT
மிலாது நபியன்று டாஸ்மாக் கடைகளும் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்திற்கும் மிலாது நபி தினமான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

எனவே மிலாது நபியன்று மேற்படி டாஸ்மாக் கடைகளும் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் செயல்படாது. அவை மூடப்பட்டிருக்கும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), ரத்னா (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News