செய்திகள்
காதலன் இறந்த சோகத்தில் பெண் விஷம் தின்று தற்கொலை
காதலன் இறந்த சோகத்தில் பெண் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த முனியமுத்துவின் மகள் அபிநயா(வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த செல்வம்(30) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் செல்வம் இறந்துவிட்டார். இதனால் அபிநயா மனவேதனையில் சோகமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 24-ந் தேதி அபிநயா வீட்டில் இருந்த விஷத்தை (எலி பிஸ்கட்) எடுத்து சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்த உறவினர்கள் அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த முனியமுத்துவின் மகள் அபிநயா(வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த செல்வம்(30) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் செல்வம் இறந்துவிட்டார். இதனால் அபிநயா மனவேதனையில் சோகமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 24-ந் தேதி அபிநயா வீட்டில் இருந்த விஷத்தை (எலி பிஸ்கட்) எடுத்து சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்த உறவினர்கள் அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.