செய்திகள்
கொரோனா தொற்று பரிசோதனை

மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி : இறந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு - 37 பேருக்கு தொற்று

Published On 2020-10-25 03:13 GMT   |   Update On 2020-10-25 03:13 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர்கள் உள்பட 3 பேர் பலியான நிலையில், மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 64 வயது முதியவர், காய்ச்சல், மூச்சு திணறல், இருமலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த 16-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை இறந்தார். அதேபோல கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 32 வயது பெண், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் மூச்சு திணறல் காரணமாக கடந்த 20-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்து 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 598 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 608 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News