செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு- போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளியை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கயல்விழி(வயது 20). கடந்த பத்து மாதத்திற்கு முன்பு மாரிமுத்துவிற்கும், கயல்விழிக்கும் திருமணம் நடந்தது. தற்போது கயல்விழி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கயல்விழிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கயல்விழி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமாகி பத்து மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கொடுமை காரணமா? என உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளியை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கயல்விழி(வயது 20). கடந்த பத்து மாதத்திற்கு முன்பு மாரிமுத்துவிற்கும், கயல்விழிக்கும் திருமணம் நடந்தது. தற்போது கயல்விழி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கயல்விழிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கயல்விழி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமாகி பத்து மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கொடுமை காரணமா? என உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.