செய்திகள்
கைது

கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

Published On 2020-10-24 06:35 GMT   |   Update On 2020-10-24 06:35 GMT
கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் உடையார்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது 28), தத்தனூர் மேலூரை சேர்ந்த ரகுநாதன்(52), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த செல்வம்(43), மணகெதி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாதன்(53) ஆகிய 4 பேரும் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News