செய்திகள்
வழக்கு பதிவு

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-10-23 17:32 GMT   |   Update On 2020-10-23 17:32 GMT
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் காட்டாத்தி மருதன் கோன் விடுதி, நால்ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த அப்பகுதியை சேர்ந்த அபூபக்கர், முகமது யூசுப் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News