செய்திகள்
கைது

கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2020-10-23 17:07 GMT   |   Update On 2020-10-23 17:07 GMT
கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் மழவராயநல்லூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். இதில் மழவராயநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள மதியழகன்(வயது 45) மற்றும் ஜெயபால் (39) ஆகியோருடைய மளிகை கடைகளில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைத்து புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து மதியழகன், ஜெயபால் ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News