செய்திகள்
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
காதல் தோல்வி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூர் கெலவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். காதல் தோல்வி காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.