செய்திகள்
கோப்புபடம்

முக ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு - பாஜக பிரமுகர் மீது வழக்கு

Published On 2020-10-22 07:14 GMT   |   Update On 2020-10-22 07:14 GMT
திமுக தலைவர் முக ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஒன்றிய பா.ஜ.க. பொறுப்பாளராக உள்ளார். 

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக மறுபதிவிட்டதாக தெரிகிறது. 

இந்த நிலையில் தி.மு.க. கிளைச் செயலாளர் கோடி, குவாகம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் மீது, வேண்டும் என்றே சினமூட்டும் வகையில் பதிவு செய்து வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News