செய்திகள்
விபத்து பலி

வி.கைகாட்டி அருகே லாரி மோதி விவசாயி பலி

Published On 2020-10-20 06:13 GMT   |   Update On 2020-10-20 06:13 GMT
வி.கைகாட்டி அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி நடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது 36). விவசாயி. இவரது உறவினர் சிறுவளூர் கிராமத்தை சேர்ந்த தேவா(40). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று வி.கைகாட்டி- அரியலூர் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் பிரிவு சாலையில் ஏறியபோது எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட செந்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மாரிமுத்துவை(40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News