செய்திகள்
கோப்புபடம்

திருப்பத்தூர் அருகே சாலைப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2020-10-19 13:06 GMT   |   Update On 2020-10-19 13:06 GMT
திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சாலைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சாலைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் உயர் அதிகாரி சாலைப்பணியாளர்களை தரக்குறைவாகவும், மிரட்டும் பாணியில் பேசுவதாகவும், சாலைப்பணியாளர் வீரைய்யா என்பவரின் பணிமாறுதல் உத்தரவை அவர் வீட்டிற்கே சென்று கதவில் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதை கண்டித்து சாலைப்பணியாளர்கள் அலுவலக வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News