செய்திகள்
புதுக்கோட்டை அருகே விஷம் தின்ற பெண் பலி
புதுக்கோட்டை அருகே விஷம் தின்ற பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கீழவேம்பன் குடியை சேர்ந்த சரவணனின் மனைவி மல்லிகா (வயது 34). இவர் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) தின்றார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.