செய்திகள்
திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி
திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டின் அருகே நேற்று மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதனை அப்புறப்படுத்த அவர் முயன்றபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.