செய்திகள்
தற்கொலை

வேலூர் அருகே தொழிலாளி தற்கொலை-போலீசார் விசாரணை

Published On 2020-10-19 11:15 GMT   |   Update On 2020-10-19 11:15 GMT
வேலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள தார்வழி பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவருடைய மனைவி பொன்னி. விஜயக்குமார் அம்மி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விஜயக்குமார் அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News