செய்திகள்
கோப்புபடம்

காரையூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-17 13:26 GMT   |   Update On 2020-10-17 13:26 GMT
காரையூர் அருகே வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரையூர்:

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொன்னமராவதி வடக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சிவராமன், அருணகிரி ஆகியோர் புதிய வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை மத்திய அரசு திருமப்பெற கோரியும் விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News