செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

திருவாலங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2020-10-17 08:06 GMT   |   Update On 2020-10-17 08:06 GMT
திருவாலங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் பழைய பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இரவு திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.13 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்ம நபர் யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News