செய்திகள்
பிரியா பெரியசாமி

மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தர்ணா போராட்டம்

Published On 2020-10-12 17:52 IST   |   Update On 2020-10-12 17:52:00 IST
தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணுக்கு நாற்காலி தேவையா? ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் விமர்சித்ததாக பிரியா பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை:

மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி  மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக  வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

23 வயது பிரியா பெரியசாமி பட்டியலினத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில்,   தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணுக்கு நாற்காலி  தேவையா? ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் விமர்சித்ததாக பிரியா பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஊராட்சிக்கான  நிதியை பெற கையெழுத்திட துணை தலைவர் மறுப்பதாகவும் குற்றம் சட்டியுள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News