செய்திகள்
கோப்புபடம்

ஆலங்குடி அருகே காவலாளி மர்ம மரணம் - விசாரணை நடத்த கோரி உறவினர்கள் மறியல்

Published On 2020-10-11 15:51 GMT   |   Update On 2020-10-11 15:51 GMT
ஆலங்குடி அருகே காவலாளி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தகோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே ஆயிபட்டியில் ராஜசேகரன் என்பவருக்குச் சொந்தமான லாரி புரோக்கர் செட் உள்ளது. இங்கு ஆயிபட்டியைச் சேர்ந்த வெத்தியப்பன் (வயது 65) என்பவர் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வந்தார். மேலும் அருகே கட்டப்பட்டு வரும் ஒரு தனியார் ஆலைக்கும் இவரே காவல்பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் லாரி ஒன்று செட்டிற்கு வந்துள்ளது. அப்போது, காவலர் இல்லாததால் அதன் டிரைவர் லாரி செட் உரிமையாளர் ராஜசேகரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பக்கத்து ஆலையில்இருப்பார் என கூறியுள்ளார். இதனையடுத்து அங்குதேடியும் அவர்இல்லை.

பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துதேடியபோது, அங்குள்ள 20 அடிஆழமுள்ள பள்ளத்தில் வெத்தியப்பன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல்அறிந்தஆலங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த வெத்தியப்பனின் கை, கால்களில் காயம் இருந்தது. இதனையடுத்து அவரது உறவினர்கள் வெத்தியப்பனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஆயிபட்டி விலக்கு ரோடு அருகே புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News