செய்திகள்
விபத்து பலி

திருவள்ளூர் வாகனம் மோதி பெயிண்டர் பலி

Published On 2020-10-10 12:33 GMT   |   Update On 2020-10-10 12:33 GMT
திருவள்ளூர் அருகே வாகனம் மோதி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு கோவிந்தமேடு பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 64). பெயிண்டர். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்னை நோக்கி வேகமாக வந்த வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான மரியதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான வாகன ஓட்டி யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News