செய்திகள்
கைது

சிக்கலில் சாராயம் கடத்தியவர் கைது

Published On 2020-10-09 11:18 GMT   |   Update On 2020-10-09 11:18 GMT
சிக்கலில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சிக்கல் கடைத்தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிக்கல் கீழக்கரையிருப்பு பகுதியை சேர்ந்த வெள்ளிநாதன் (40) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளிநாதனை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News