செய்திகள்
தற்கொலை

உடையார்பாளையம் அருகே முதியவர் தற்கொலை

Published On 2020-10-09 07:01 GMT   |   Update On 2020-10-09 07:01 GMT
உடையார்பாளையம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள பருக்கல் காலனித் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 70). விவசாயி. இவரது காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நீண்ட நாட்களாக காயம் ஆறாமல் வலி இருந்து வந்தது. இந்நிலையில் மனமுடைந்த தர்மராஜ் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் தர்மராஜை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தர்மராஜ், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News