செய்திகள்
மானாமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
மானாமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
மானாமதுரை குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). இவர் மானாமதுரை அண்ணா சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மானாமதுரை பட்டறை தெருவை சேர்ந்த சோனைபாண்டி, ரவி மீது மோதினார். இதில் ரவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). இவர் மானாமதுரை அண்ணா சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மானாமதுரை பட்டறை தெருவை சேர்ந்த சோனைபாண்டி, ரவி மீது மோதினார். இதில் ரவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.