செய்திகள்
புதுக்கோட்டை அருகே கார் மோதி வாலிபர் பலி
புதுக்கோட்டை அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தார். அகரப்பட்டி கல்லுப்பட்டறை அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த பெருமாள் சம்பவஇடத்திலேயே இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.